Tuesday, May 11, 2010

சோழபுரம் கிளையில் ஜூலை 4 சம்மந்தமாக நான்கு இடங்களில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

சோழபுரம் கிளையில் ஜூலை 4 சம்மந்தமாக நான்கு இடங்களில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 10.05.10 திங்கட்கிழமை அன்று தோப்புத்தெரு, மேலத்தெரு, வடக்குத்தெரு, கீழவீதி, ஆகிய நான்கு இடங்களில் ஜூலை 4 விழிப்புனர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் மற்றும் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாங்கினார், கிளை பொருளாளர் அப்துல் மாலிக் அவர்கள் முன்னிலை வகித்தார்.

Saturday, May 8, 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 ஆலோசனை கூட்டம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 ஆலோசனை கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 07.05.10 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜூலை 4 ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சுவர் விளம்பரம், ப்ளெக்ஸ் விளம்பரம், தெருமுனை பிரச்சாரங்கள், பெண்கள் பயான், மேலும் மக்களை எவ்வாறு அழைத்து செல்வது ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முதல் கட்டமாக நான்கு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன் மற்றும் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்களும் கலந்து கொண்டனர்.




Monday, May 3, 2010

சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம்.

சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் மர்க்கஸில் 01.05.10 சனிக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இதில் சகோ: உபைதுல்லாஹ் மன்பஈ (சோழபுரம் மர்க்கஸ் இமாம்) அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

Friday, April 9, 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஜூலை 4 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் சோழபுரம் தவ்ஹீத் மர்க்கஸில் 07.04.10 புதன்கிழமை அன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், மாவட்ட பேச்சாளர் அன்சாரி, கிளைத் தலைவர் அகமது கபீர், கிளை பொருளாளர் அப்துல் மாலிக் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Saturday, March 27, 2010

சோழபுரம் கிளையில் பொதுக்கூட்டம்.







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 21.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் K.S.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் மௌலூதும், மீலாதும் என்ற தலைப்பிலும் சோழபுரம் தவ்ஹீத் பள்ளி இமாம் S. உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் இறுதிப் பேருரை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட து.செயலாளர் M.அக்பர் அலி, கிளை தலைவர் A.கபீர் அகமது, கிளை செயலாளர் A.M.ஜுபைர், கிளை பொருளாளர் A.அப்துல் மாலிக், சோழபுரம் UAE கிளை தலைவர் A.முஹம்மது பரீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பேச்சாளர் H.அன்சார் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.